மழை
பாரெங்கும் உள்ள பாலினங்கள் அனைத்தும்
பார்த்து ரசிப்பதற்கென்றே பெய்திடும்-பனிமழை!
பயிர் விதைத்த உழவன் உள்ளம்
உயிர் பெற பெய்திடும்-மாமழை!
மணிக்கணக்காக படித்து சோர்ந்த மாணவர்களின்
விடுமுறைக்கென்றே பெய்திடும்-விடாமழை!
அன்பால் இனைந்த அனைவரும் ஆனந்தமாய்
ஆடிப் பாடிடவே பெய்திடும்-அடைமழை!